என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விமானத்தில் யோகா செய்த வாலிபர் இறக்கி விடப்பட்டார்
Byமாலை மலர்6 Nov 2019 8:52 AM GMT (Updated: 6 Nov 2019 8:52 AM GMT)
சென்னையில் இருந்து இலங்கை செல்லும் விமானத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டவர் கீழே இறக்கி விடப்பட்டார்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு இன்று காலை ஸ்பைஜெட் விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த குணசேனா என்ற வாலிபர் திடீரென விமானத்தின் கதவு அருகே சென்று அமர்ந்தபடி யோகா பயிற்சி செய்தார். மேலும் உடற்பயிற்சியையும் செய்தார்.
இதை பார்த்த மற்ற பயணிகள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விமானிக்கு தகவல் தெரிவித்தனர். குணசேனாவிடம் இருக்கைக்கு சென்று அமருமாறு ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் குணசேனா தொடர்ந்து யோகா பயிற்சி செய்ததால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அங்கு குணசேனாவை விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். அவரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
அவரிடம் அமெரிக்க நாட்டு பாஸ்போர்ட் இருந்தது. அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த குணசேனா அங்கிருந்து வாரணாசி வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து சென்னை வந்து இலங்கைக்கு செல்ல டிக்கெட் எடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
பின்னர் அவரை விமானத்தில் ஏற்றி செல்லுமாறு விமான நிறுவனத்திடம் தெரிவித்தனர். ஆனால் அவரை விமானத்தில் ஏற்ற மறுத்து டிக்கெட் கட்டணத்தை விமான நிறுவனம் திருப்பி கொடுத்தது.
இதையடுத்து குணசேனாவை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்க அழைத்து சென்றனர். ஆனால் அவரை போலீசார் அழைத்துச் செல்ல மறுத்தனர்.
நீண்ட விவாதத்திற்கு பிறகு குணசேனாவை போலீசார் இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்க அழைத்து சென்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு இன்று காலை ஸ்பைஜெட் விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த குணசேனா என்ற வாலிபர் திடீரென விமானத்தின் கதவு அருகே சென்று அமர்ந்தபடி யோகா பயிற்சி செய்தார். மேலும் உடற்பயிற்சியையும் செய்தார்.
இதை பார்த்த மற்ற பயணிகள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விமானிக்கு தகவல் தெரிவித்தனர். குணசேனாவிடம் இருக்கைக்கு சென்று அமருமாறு ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் குணசேனா தொடர்ந்து யோகா பயிற்சி செய்ததால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அங்கு குணசேனாவை விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். அவரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
அவரிடம் அமெரிக்க நாட்டு பாஸ்போர்ட் இருந்தது. அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த குணசேனா அங்கிருந்து வாரணாசி வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து சென்னை வந்து இலங்கைக்கு செல்ல டிக்கெட் எடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
பின்னர் அவரை விமானத்தில் ஏற்றி செல்லுமாறு விமான நிறுவனத்திடம் தெரிவித்தனர். ஆனால் அவரை விமானத்தில் ஏற்ற மறுத்து டிக்கெட் கட்டணத்தை விமான நிறுவனம் திருப்பி கொடுத்தது.
இதையடுத்து குணசேனாவை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்க அழைத்து சென்றனர். ஆனால் அவரை போலீசார் அழைத்துச் செல்ல மறுத்தனர்.
நீண்ட விவாதத்திற்கு பிறகு குணசேனாவை போலீசார் இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்க அழைத்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X