search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த கோவில்.
    X
    கொள்ளை நடந்த கோவில்.

    காரிமங்கலம் அருகே மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து நகை-பணம் கொள்ளை

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மாரியம்மன் கோவிலில் 2-வது முறையாக உண்டியல் உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்துள்ள பந்தாரஅள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிலையில் நேற்று இரவு பூசாரி கவுரவன் வழக்கம்போல்அம்மனுக்கு பூஜை செய்து கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று அதிகாலை கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கோவில் பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அவர் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலுக்குள் சென்று பார்த்தார். அங்கு கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.50 ஆயிரத்தையும், நகைகளையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து ஊர் பொதுமக்கள் காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இதே கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    தற்போது இந்த சம்பவம் 2-வது முறையாக நடந்து இருப்பது அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×