search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சேலம் மத்திய சிறை கைதி பலி

    சேலம் மத்திய சிறையில் மூச்சு திணறால் பாதிக்கப்பட்ட கைதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    சேலம்:

    குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கிஷோர் (வயது 43). இவரை கிருஷ்ணகிரி சிப்காட் போலீசார் ஒரு மோசடி வழக்கில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனாலும் சிகிச்சை பலனின்றி கிஷோர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×