என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரியில் 2 மகன்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி
Byமாலை மலர்4 Nov 2019 2:27 PM GMT (Updated: 4 Nov 2019 2:27 PM GMT)
எனது கணவருக்கு உரிய சொத்தை அவரது சகோதரர்கள் பிரித்துக் கொடுக்காததால் 2 மகன்களுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி:
தர்மபுரி அன்ன சாகரத்தை சேர்ந்தவர் கவிதா. இவரது மகன்கள் கவுதம் (வயது 24), தமிழ்செல்வன் (22). இவர்கள் 3 பேரும் இன்று காலை தர்மபுரி கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு 3 பேரும் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து விசாரணைக்காக தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
தீக்குளிக்க முயன்றது ஏன்? என்பது குறித்து கவிதா கூறியதாவது:-
20 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் முருகன் இறந்து விட்டார். அவரது பாகத்துக்குரிய சொத்தை அவரது சகோதரர்கள் பிரித்துக் கொடுக்கவில்லை. இதுகுறித்து ஏற்கனவே தர்மபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தேன். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் சொத்து பிரச்சினையில் இன்று மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தீக்குளிக்க முயற்சி செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X