என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேப்பனபள்ளியில் கஞ்சா விற்ற- வாலிபர் கைது
Byமாலை மலர்4 Nov 2019 2:09 PM GMT (Updated: 4 Nov 2019 2:09 PM GMT)
வேப்பனபள்ளியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வேப்பன பள்ளி பகுதியில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியுள்ளார். அதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து சோதனையில் அவரிடம் 200 கிராம் அளவிலான கஞ்சா இருந்துள்ளது. மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வேப்பனபள்ளி பகுதியைச் சேர்ந்த சசிகுமார்(19) என்பதும், அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X