search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர். ராசா பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கிய காட்சி.
    X
    ஆர். ராசா பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கிய காட்சி.

    பெரம்பலூரில் திமுக சார்பில் நிலவேம்பு குடிநீர்

    பெரம்பலூரில் திமுக சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா தொடங்கி வைத்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் உழவர் சந்தை முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பியுமான ஆ. ராசா, நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்து, டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொது மக்களிடையே விநியோகம் செய்தார். தொடர்ந்து, உழவர் சந்தைக்கு வந்திருந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் வல்லபன், மருத்துவர் செங்குட்டுவன், நகர செயலாளர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தொடந்து 7 -ந் தேதி வரை நடைபெறுகிறது.
    Next Story
    ×