search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நத்தம் அருகே 108 ஆம்புலன்சில் பிறந்த ஆண்குழந்தை

    நத்தம் அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
    நத்தம்:

    நத்தம் அருகே உலுப்பகுடியைச் சேர்ந்தவர் கருப்பையா (25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவிதா(20). நேற்று கவிதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உலுப்பகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்த்தனர். அங்கிருந்து கூடுதல் மருத்துவ வசதிக்காக வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா ஆலோசனையின் பேரில் திண்டுக்கல் அரசுமருத்துவமனைக்கு திண்டுக்கல் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த ஆம்புலன்சை டேவிட் என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். சிறுமலை பிரிவு அருகே உள்ள ரெட்டியபட்டி பகுதியில் சென்ற போது பிரசவ வலி அதிகரித்ததும் வேனில் வந்த மருத்துவ உதவியாளர் உமாதிவ்யா ஆம்புலன்சிற்குள்ளேயே பிரசவம் பார்த்தார்.

    அப்போது அழகான ஆண்குழந்தை ஒன்று கவிதாவிற்கு பிறந்தது. தாயும், குழந்தையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் மருத்துவ பணியாளர்களை பாராட்டினர்.
    Next Story
    ×