என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே சொத்து பிரச்சினையில் மகளை தாக்கிய தாய்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே குன்னூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அய்யனார் மகள் வெற்றிச் செல்வி (வயது 35). தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 மாதங்களாக அவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
வெற்றிச்செல்விக்கும் அவரது தாய் கச்சம்மாளுக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கச்சம்மாள் மற்றும் அவரது மற்றொரு மகள் விஜயலெட்சுமி ஆகியோர் வெற்றி செல்வியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் ஆண்டிப்பட்டி அருகே ராயவேலூரைச் சேர்ந்தவர் ராமன் (55). இவரது மகள் சின்னமாரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். இருவரும் பிரிந்து வாழும் நிலையில் மகனின் பொருட்களை எடுக்க பாலமுருகன் வீட்டுக்கு தனது தந்தையுடன் சென்றுள்ளார்.
வீடு பூட்டி இருந்ததால் பூட்டை உடைக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த பாலமுருகன் மற்றும் அவரது உறவினர் சொக்கன் ஆகியோர் ராமனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ராஜதானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்