search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்திக்குத்து
    X
    கத்திக்குத்து

    மதுரையில் பார் ஊழியருக்கு கத்திக்குத்து

    மதுரையில் பார் ஊழியரை கத்தியால் குத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    உசிலம்பட்டி அருகே உள்ள முண்டுவேலம் பட்டியைச் சேர்ந்தவர் மலையன் (வயது 45). இவர், முடக்குசாலையில் உள்ள மல்லிகை மனமகிழ் மன்றத்தில், பார் சப்ளையராக உள்ளார். நேற்று மாலை இங்கு பிரகாஷ் (29), ஆனந்தகுமார் (31) ஆகியோர் வந்தனர். பிரகாஷ் ரூ.500 கொடுத்து மது வாங்கி வருமாறு மலையனிடம் கூறி உள்ளார்.

    அதன்படி மது வாங்கி வந்த மலையன், மீதி பணத்தை கொடுக்க மறந்து விட்டாராம். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் உள்பட 2 பேரும் மலையனை கத்தியால் குத்தினர்.

    இதில் அவர் காயமடைந்தார். கரிமேடு போலீசார், மலையன் புகார் அடிப்படையில் விசாரணை நடத்தி ஆனந்தகுமாரை கைது செய்தனர். பிரகாசை தேடி வருகின்றனர்.

    கீரைத்துறை தாயுமான சுவாமி நகரைச் சேர்ந்தவர் சந்தானம். இவருக்கும், முருகவேல் என்பவருக்கும் இடத்தகராறு உள்ளது. இது தொடர்பாக வழக்கு சந்தானத்திற்கு சாதகமாக முடிந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த முருகவேல், அவரது மனைவி முனியம்மாள் ஆகியோர் வீடு புகுந்து சந்தானத்தை தாக்கி உள்ளனர். இதனை தடுக்க வந்த அவரது மனைவி சுசீலா (65) அரிவாளால் வெட்டப்பட்டார்.

    இது குறித்து கீரைத்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகவேல் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×