என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தஞ்சை அருகே பெண் தூக்குபோட்டு தற்கொலை
வல்லம்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டை மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் விஜயா(வயது 43). இவருடைய கணவர் வரதராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
விஜயா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தஞ்சை அருகே உள்ள லாலி நகரில் வீடு வாடகைக்கு எடுத்து கொண்டு தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவருடைய மகள் தஞ்சை அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன் தினம் விஜயாவின் மகள் வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். பிற்பகலில் விஜயாவின் உறவினர் ஒருவர் அவர் வீட்டிற்கு வந்து கதவை தட்டி உள்ளார். கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் அவர் விஜயாவின் கொழுந்தனாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார்.அவரும் வீட்டிற்கு வந்து கதவை தட்டி உள்ளார்.
அதன் பின்னரும் கதவுதிறக்கப்படாததால் இருவரும் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தபோது. அங்கு விஜயா சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்