என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராஜபாளையம் அருகே விபத்து- கார் டிரைவர் பலி
ராஜபாளையம்:
ராஜபாளையம் தர்மாபுரம் தெருவைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது50). இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் கார் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இன்று காலை சங்கரநாராயணன் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
ராஜபாளையம் தென்றல் நகர் செண்பகத்தோப்பு ரோட்டில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. எதிர்மேடு அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சங்கரநாராயணன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மேல ஆவாரம்பட்டி தெருவைச் சேர்ந்த குமார் (37), அவரது மனைவி ராஜேஸ்வரி (28), 7 மாத கைக்குழந்தை அமிர்தா ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. இவர்கள் 3 பேரும் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
விபத்து தொடர்பாக வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்