search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திண்டுக்கல்லில் போலி ரெயில் டிக்கெட் மையம் நடத்தியவர் கைது

    திண்டுக்கல்லில் போலி ரெயில் டிக்கெட் மூலம் பயணிகளிடம் பணம் மோசடி செய்வரை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் ரெயில்வே அனுமதி இல்லாமல் டிக்கெட் முன்பதிவு மையம் செயல்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை கோட்ட கண்காணிப்பாளர் ஜெகன்நாதனுக்கு புகார்கள் வந்தன.

    அவரது உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அஜிஸ்(33) என்பவர் அனுமதியின்றி ரெயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் நடத்தியது தெரியவந்தது. அவரிடமிருந்து முன்பதிவு டிக்கெட் மற்றும் காலாவதியான டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    பல்வேறு பெயர்களை ஐ.ஆர்.சி.டி.சி பயணியர் நுழைவு உருவாக்கி அஜிஸ் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கணினி உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×