search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ராஜபாளையம் பகுதியில் விடிய, விடிய கனமழை

    ராஜபாளையம் பகுதியில் விடிய, விடிய மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் பகுதியில் விடிய, விடிய கனமழை பெய்தது. நேற்று இரவு 12 மணிக்கு தொடங்கிய மழை இன்று காலை 8 மணி வரை இடிமின்னலுடன் பெய்தது.

    நீர் பிடிப்பு பகுதிகளான ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சிமலை, அய்யனார் கோவில் ஆறு, முள்ளியாறு, பேயனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    6-வது மைல் மகராசி குடிநீர் தேக்க ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து ஏரி நிரம்ப தொடங்கி உள்ளது.

    ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் 108 கண்மாய்கள் மற்றும் புளியங்குளம், கருங்குளம், தென்குளம், கொண்டநேரி உள்ளிட்ட பலகண்மாய்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன.

    இந்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×