என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயமங்கலம் அருகே மொபட் மீது பஸ் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்2 Nov 2019 6:03 PM GMT (Updated: 2 Nov 2019 6:03 PM GMT)
மொபட் மீது பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
தேவதானப்பட்டி:
தேனி அருகேயுள்ள அரண்மனைபுதூரை சேர்ந்தவர் சுருளிநாதன் (வயது 55). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை தனது மனைவி வளர்மதி (49) உடன் மொபட்டில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பெரியகுளம்-வைகை அணை சாலையில் ஜெயமங்கலம் 4 ரோடு பிரிவு அருகே சென்றபோது, பெரியகுளத்திலிருந்து தேவதானப்பட்டி நோக்கி வந்த தனியார் பஸ், மொபட் மீது மோதியது. விபத்தில் கணவன்-மனைவி 2 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அதில் சுருளிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த வளர்மதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகேயுள்ள அரண்மனைபுதூரை சேர்ந்தவர் சுருளிநாதன் (வயது 55). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை தனது மனைவி வளர்மதி (49) உடன் மொபட்டில் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பெரியகுளம்-வைகை அணை சாலையில் ஜெயமங்கலம் 4 ரோடு பிரிவு அருகே சென்றபோது, பெரியகுளத்திலிருந்து தேவதானப்பட்டி நோக்கி வந்த தனியார் பஸ், மொபட் மீது மோதியது. விபத்தில் கணவன்-மனைவி 2 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அதில் சுருளிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த வளர்மதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X