search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி பலி
    X
    சிறுமி பலி

    தானிப்பாடியில் மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி

    திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 வயது குழந்தை பலியானார்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி ஊத்தங்கரை ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகள் மோனிஷா (வயது 3) குழந்தைக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து தானிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மோனிஷா பரிதாபமாக இறந்தாள்.

    இந்த சம்பவத்தையடுத்து தானிப்பாடியில் சுகாதார பணிகள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் இன்று நடந்தன.

    இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில்:-

    எங்கள் பகுதியில் அதிகளவு குப்பைகள் தேங்கிக் கிடக்கிறது. மேலும் கழிவுநீரும் அதிகளவு தேங்கியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தோம்.

    ஆனால் அதிகாரிகள் மெத்தனபோக்கால் எந்த பணியும் செய்யவில்லை. தற்போது காய்ச்சலால் குழந்தை இறந்த பிறகு சுகாதார பணியை மேற்கொண்டு வருகின்றனர். முன்கூட்டியே பணி செய்து இருந்தால் குழந்தையின் இறப்பை தவிர்த்திருக்கலாம் என்றனர்.

    Next Story
    ×