என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரம்பலூரில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரவிழா
பெரம்பலூர்:
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர்(பொறுப்பு) ராஜேந்திரன் தலைமையில் அரசு அலுவலர்கள் ஊழல் தடுப்பது குறித்த உறுதி மொழி எடுத்தனர். அதில் பொது வாழ்க்கையில் நேர்மையை ஊக்குவிப்பது, லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. எல்லா ஊழியர்களும் ஒழுக்க நெறிமுறை கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
பின்னர் பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்கள் பார்வைக்காக கலெக்டர் அலுவலகங்களில் பல இடங்களில் ஒட்டப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நோட்டீசில் "நேர்மை நமது வாழ்வின் வழிமுறை, ஊழலற்ற வாழ்வே உயர்வுக்கு வழி" என்ற வாசகங்களும், லஞ்சம் குறித்து 94981 10576 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் ரத்தினவள்ளி, சுலோச்சனா, ஏட்டு மனோகரன் உட்பட போலீசார் பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்