search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல்
    X
    தாக்குதல்

    ஆண்டிப்பட்டி அருகே சொத்து தகராறில் குடும்பத்தினரை தாக்கிய வாலிபர்

    ஆண்டிப்பட்டி அருகே சொத்து தகராறில் ஆட்டோவை சூறையாடி குடும்பத்தினரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜதானி காமாட்சிபுரம் தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் முத்து. இவருக்கும் இவரது அண்ணன் பால்கண்ணன் என்பவருக்கும் சொத்து தகராறு காரணாக முன் விரோதம் இருந்து வருகிறது. இதனால் 2 குடும்பத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று பால்கண்ணனின் மகன் ராஜன் செல்லப்பா (26). முத்து வீட்டுக்கு வந்தார். அங்கு முத்துவின் மகன் ரஞ்சித்துக்கு சொந்தமான ஆட்டோவை அடித்து நொறுக்கி சூறையாடினார். இதை ரஞ்சித்தின் அண்ணன் முருகன் தட்டிக் கேட்டார். இதனால் முருகன், அவரது தந்தை முத்து, தாய் செல்லம்மாள் ஆகியோரை அடித்து கொலை மிரட்டல் விடுத்தார்.

    படுகாயமடைந்த அவர்கள் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ரஞ்சித் கொடுத்த புகாரின் பேரில் ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜன் செல்லப்பாவை கைது செய்தனர்.

    Next Story
    ×