search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஒட்டன்சத்திரம் அருகே கார் மீது லாரி மோதி வாலிபர் பலி

    ஒட்டன்சத்திரம் அருகே கார் மீது லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 33). இவருக்கு சொந்தமான காரில் இவரது நண்பர் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த நாகராஜ் (வயது 33) என்பவருடன் ஒட்டன்சத்திரம் சென்றுவிட்டு சத்திரப்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    காரை சேகர் ஓட்டி வந்தார். விருப்பாட்சி மேடு அருகே கார்வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பலியானார். நகராஜ் பலத்த காயமடைந்தார். இதையடுத்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×