என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெட்டப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனை மேலாளரை தாக்கி கொலை மிரட்டல்- 2 பேர் கைது
சேதராப்பட்டு:
நெட்டப்பாக்கம் செம்படபேட் புதுநகரை சேர்ந்தவர் அன்பரசன் (வயது31). இவர் வில்லியனூர் கோட்டைமேடு பகுதியில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரிடம் நெட்டப்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கலைவாணன் என்பவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு அணுகி புதிய மோட்டார் சைக்கிள் வாங்கினார்.
ஆனால் 2 மாதமாக அன்பரசன் மோட்டார் சைக்கிளை பதிவு செய்து தரவில்லை. இதுபற்றி கலைவாணன் பலமுறை கேட்டும் அன்பரசன் காலம் கடத்தி வந்தார்.
சம்பவத்தன்று அன்பரசன் வீட்டில் இருந்த போது இதுகுறித்து கலைவாணன் மற்றும் அவரது அக்காள் கணவரான கிருஷ்ணராஜ் ஆகியோர் சென்று கேட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.
இதனால் இதில் ஆத்திரம் அடைந்த கலைவாணன் மற்றும் கிருஷ்ணராஜ் ஆகிய 2 பேரும் சேர்ந்து இரும்பு தடியால்தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். அதோடு இதனை தட்டிக்கேட்ட அன்பரசனின் நண்பர் கிருஷ்ணகுமாரையும் தாக்கினர்.
இதில் காயம் அடைந்த இருவரும் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து அன்பரசன் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விபல் குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து கலைவாணன் மற்றும் அவரது மைத்துனர் கிருஷ்ணராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே கலைவாணனின் அக்காள் கலை செல்வி போலீசில் புகார் செய்தார். புகாரில் தன்னை அன்பரசன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த கவுதமன், கிருஷணகுமார் ஆகியோர் தாக்கியதாக கூறினார். இதன்பேரில் அன்பரசன் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்