என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் 2 வீடுகளில் புகுந்து நகை-பணம் கொள்ளை
மதுரை:
மதுரை புதூர் வி.எம்.ஜி. நகரைச் சேர்ந்தவர் ஆஷா (வயது45). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு சாவியை மறைவான இடத்தில் வைத்து வெளியே சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நைசாக சாவியை எடுத்து வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.
வீடு திரும்பிய ஆஷா நகை, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள வெங்கடாசலபுரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கவுனாமணி (34). சம்பவத்தன்று இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டனர்.
நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 செல்போன்கள், ரூ.3 ஆயிரம் ரொக்கம், பென் டிரைவ் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர். இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், ஜீவா நகர் வள்ளுவர் தெருவைச் சேர்ந்த கண்ணன் (18) என்பவர் திருடியது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்