search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காய பயிர்.
    X
    வெங்காய பயிர்.

    நிலக்கோட்டை பகுதியில் தொடர் மழையால் வெங்காய பயிர்கள் அழுகின

    நிலக்கோட்டை பகுதியில் தொடர் மழையால் வெங்காய பயிர்கள் அழுகின. இதை பார்த்த விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்கள்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சீத்தாபுரம், ஆண்டிப்பட்டி, மிளகாய்பட்டி, நோட்டக்காரன்பட்டி, குரும்பப்பட்டி, பிள்ளையார் நத்தம், உள்ளிட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பெய்த மழையை நம்பி ஏராளமான வெங்காயத்தை சாகுபடி செய்தனர்.

    அப்படி சாகுபடி செய்த வெங்காயம் தொடர் சாரல் மழையும், அவ்வப்போது மாலை நேரத்தில் வீசிய குளிர்ந்த காற்று வெங்காய தாளில் பட்டதால் வெளுத்து போன நிறத்தில் மாறி வெங்காய பயிர் அழுகல் நோய் தாக்கியதால் சாகுபடி செய்த வெங்காய பயிர்கள் நிலத்தில் மடித்து கிடக்கிறது.

    இதை பார்த்த விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்கள். இது போன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

    இதை பார்த்த விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்கள். 

    Next Story
    ×