என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உருளையன்பேட்டையில் நூதன முறையில் கார் திருட்டு
Byமாலை மலர்30 Oct 2019 2:51 PM GMT
புதுவையில் நூதன முறையில் கார் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை செங்குந்தர் வீதியை சேர்ந்தவர் அப்துல்கரீம் (வயது28). கார் டிரைவர். இவர் தனது காரை வாடகைக்கு விட்டு வந்தார். இதனை ஈரோட்டை சேர்ந்த அந்தோணி (39) என்பவர் புதுவையில் தொழில் தொடங்க இருப்பதாகவும் அதற்கு கார் வாடகைக்கு தேவைப்படுவதாகவும் கூறி காரை வாடகைக்கு எடுத்துள்ளார்.
பின்னர் அதற்கான வாடகையை 2 முறை அப்துல் கரீமிடம் செலுத்தியுள்ளார். அந்தோணி வாடகைக்கு காரை எடுத்து ஒரு மாத காலம் முடிந்தும் காரை அப்துல்கரீமிடம் ஒப்படைக்காமல் காலம் கடத்தி வந்தார். இதனை அப்துல்கரீம் அந்தோணியிடம் கேட்ட போது சரியாக பதில் சொல்லாமல் இருந்து வந்தார்.
இதுபற்றி அப்துல்கரீம் விசாரித்த போது இதேபோல் பலரிடம் அந்தோணி ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் இதுகுறித்து அப்துல்கரீம் உருளையன் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கார் கடத்தலில் ஈடுபட்ட அந்தோணி என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X