search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    மண்ணச்சநல்லூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி

    மண்ணச்சநல்லூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் தொழில் முடங்கியது.
    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் நேற்று முன்தினம் காலை 7.30 மணிமுதல் மாலை 3 மணி வரை மின்சார வினியோகம் தடைபட்டது. மேலும் நேற்று அதிகாலை 3 மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம் இரவு 9 மணி ஆகியும் வினியோகிக்கப்படவில்லை.

    இதனால் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் தொழில் முடங்கியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மின்சார வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது தொடர் மழையின் காரணமாக சமயபுரம் பகுதியில் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் மின்சார வினியோகம் தடையானதாக தெரிவித்தனர். விரைவாக பழுதை சரி செய்து சீரான மின்சாரம் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×