search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    எருமியாம்பட்டி அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பலி

    எருமியாம்பட்டி அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரூர்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த இரட்டை பனங்காடு பகுதியை சேர்ந்த அரியாக்கவுண்டர் மகன் குமார் (வயது24) கூலித்தொழிலாளி.

    இவர், அரூர் அருகே உள்ள தாதரைவலசை பகுதியில் உள்ள பிருந்தா என்ற பெண்ணை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பிருந்தா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    தீபாவளிக்கு பிருந்தாவை பார்க்க வந்த குமார் நேற்று மோட்டார் சைக்கிளில் வாழப்பாடிக்கு புறப்பட்டு சென்றார்.

    எருமியாம்பட்டி பகுதியில் சென்றபோது சேலத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற தனியார் பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீதுமோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குமார் பலியானார். இந்த விபத்து குறித்து கோபிநாதம்பட்டி கூட்டுரோடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×