என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வக்கீல் வீட்டில் நகை திருடிய வேலைக்காரி கைது
புதுச்சேரி:
புதுவை லப்போர்த் வீதியை சேர்ந்தவர் மோகன் கீர்த்தி குமார். வக்கீல். சம்பவத்தன்று இவரது மனைவி குளிக்க செல்லும் முன்பு தனது 4 பவுன் தங்க சங்கிலியை கழற்றி படுக்கையறையில் வைத்துவிட்டு சென்றார். திரும்ப வந்து பார்த்த போது தங்க சங்கிலி காணாமல் போயிருந்தது.
வீட்டில் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் மோகன் கீர்த்திகுமார் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வீட்டில் வைத்திருந்த பொருளை வெளியாட்கள் யாரும் வந்து திருடிச்செல்ல வாய்ப்பு இல்லை என்பதால் வீட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் அன்றைய தினம் வீட்டிற்கு வந்து சென்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டு வேலை செய்யும் அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்த நமேஷா பேகம் என்ற நிஷா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனையடுத்து அவரை தனியாக அழைத்து சென்று போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தங்க சங்கிலியை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து நமேஷா பேகத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்