என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வல்லம் அருகே பெண் இறப்பில் மர்மம்: போலீசில் தந்தை புகார்
Byமாலை மலர்29 Oct 2019 12:01 PM GMT (Updated: 29 Oct 2019 12:01 PM GMT)
வல்லம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த பெண் மரணம் அடைந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.
வல்லம்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காட்டுக்குறிச்சி ஆழிவாய்க்காலை சேர்ந்த தங்கராசு மகள் ஸ்ரீதேவி. இவருக்கும் மருங்குளத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சி மற்றும் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
கடந்த 27-ந் தேதி ஸ்ரீதேவியை தஞ்சையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர் வழியிலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீதேவியின் தந்தை தங்கராசு தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக வல்லம் போலீசில் புகார் செய்தார. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X