என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ரூ.50 லட்சம் வரதட்சணை: போலீஸ் அதிகாரி மகன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்
சென்னை:
சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் உதவி கமிஷனராக பணியாற்றி வருபவருடன் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர் சென்னையில் டி.எஸ்.பியாக பணியாற்றி ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் ஆவார்.
வரதட்சணையாக ரூ.50 லட்சம் பணம், ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பிலான வீட்டையும் எழுதி கேட்டனர்.
வரதட்சணையில் ரூ.10 லட்சத்தை முதலில் கொடுத்தோம். அதில் புதிய கார் வாங்கிய அதிகாரி, அவரது தாயின் பெயரில் பதிவு செய்துள்ளார். நாங்கள் வசிக்கும் வீட்டையும் அவரது பெயரில் உடனடியாக எழுதிக் கொடுக்க சொல்லி வற்புறுத்துகின்றனர்.
இதுபற்றி மறைமலை நகரில் உள்ள அவர்களின் வீட்டுக்கு சென்று கேட்டபோது நாயை ஏவி விட்டு கடிக்கவிட்டனர். இதில் எனது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக மறைமலைநகர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திருமங்கலம் மகளிர் போலீசிலும் புகார் அளித்துள்ளேன். திருமணத்துக்கு மண்டபம் பார்த்து பத்திரிகையும் அச்சடித்து விட்ட நிலையில் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்