என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எட்டயபுரத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Byமாலை மலர்28 Oct 2019 3:05 PM GMT (Updated: 28 Oct 2019 3:05 PM GMT)
எட்டயபுரத்தில் சுவிட்ச் போர்டில் கை வைத்த வாலிபர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் பழனிசாமி மகன் சங்கர்(வயது 32), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் எட்டயபுரம் அருகே உள்ள மாதாபுரத்தில் தனது உறவினரின் இறுதி சடங்கிற்கு சென்ற சங்கர் அங்கிருந்த சுவிட்ச் போர்டில் கை வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் சங்கர் தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினரின் இறுதி சடங்கிற்கு சென்ற இடத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X