என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கலிதீர்த்தாள்குப்பத்தில் பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் கைது
திருபுவனை:
திருபுவனை அருகே உள்ள கலிதீர்த்தாள்குப்பத்தில் அரசு கலைஞர் கருணாநிதி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 16 வயது மாணவி பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு வந்த மாணவி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் பல இடங்களில் மகளை தேடினர். ஆனால் எங்கும் இல்லை.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் திருபுவனை போலீசில் புகார் செய்தனர். புகாரில் தங்களது மகளை கீழூரை சேர்ந்த புருஷோத்தமன் மகன் கவுதம் (21) என்பவர் கடத்தி சென்று விட்டதாக புகார் செய்திருந்தனர். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாணவியை கவுதம் கடத்தி சென்று விழுப்புரம் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விழுப்புரம் பகுதிக்கு சென்று கவுதமனை கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்