search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோதல்
    X
    மோதல்

    பெரியகுளத்தில் பட்டாசு வெடித்ததில் கோஷ்டி மோதல்

    தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்ததில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

    தேனி:

    பெரியகுளம் அருகே உள்ள ஏ.புதுப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 21). நேற்று இவர் தனது வீட்டு முன்பு வெடி வெடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி, நிவாஸ், முத்துமணி ஆகியோர் தட்டிக் கேட்டனர். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

    இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் செல்லப் பாண்டி படுகாயமடைந்தார். பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல தென்கரை அருகே உள்ள மூன்றாந்தல் பகுதியில் பட்டாசு வெடித்ததில் ராமகிருஷ்ணன், பிரபு மற்றொரு ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×