search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி

    திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நேருஜி நகர் சத்யா காலனியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் சதீஸ்குமார் (வயது 19). கேட்டரிங் முடித்துள்ள இவர் கோவையில் வேலை பார்த்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக நேற்று வீட்டுக்கு வந்தார். தனது மோட்டார் சைக்கிளில் சின்னாளப்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றார். பின்னர் இருவரும் பைக்கில் ஏ.வெள்ளோடு அருகே வந்தபோது பைக் தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த சதீஸ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×