என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நல்லம்பள்ளி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி
Byமாலை மலர்25 Oct 2019 4:19 PM GMT (Updated: 25 Oct 2019 4:19 PM GMT)
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மர்ம காய்ச்சலுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
நல்லம்பள்ளி:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது லளிகம் கிராமம். இந்த கிராமத்தில் புதுவீதி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். கட்டிட மேஸ்திரி. இவருடைய மகள் கவிநிலா (வயது 6). இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தாள். கடந்த சில நாட்களாக கவிநிலாவுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தனர். ஆனால் குணமாகவில்லை.
இந்தநிலையில் நேற்று காலையில் காய்ச்சல் கடுமையானது. உடனே தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிநிலா இறந்தாள். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X