என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கார் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்த டிரைவரை அலைக்கழித்த வங்கிக்கு ரூ.90 ஆயிரம் அபராதம்
Byமாலை மலர்25 Oct 2019 2:55 PM GMT (Updated: 25 Oct 2019 2:55 PM GMT)
கார் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்த டிரைவரை அலைக்கழித்த வங்கிக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் கலாநிதி(வயது 29). டிரைவரான இவர் சொந்தமாக கார் வாங்க தாட்கோ மூலம் கடன் கேட்டு, லாடபுரம் கிராமத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கடந்த 2016-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தின் மீதான நிலைகுறித்து, தாட்கோ மேலாளருக்கு தகவல் தெரிவிக்காமலும், கடன் வழங்காமலும் 4 மாதமாக வங்கி அதிகாரிகள் கலாநிதியை அலைக்கழித்துள்ளனர்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான கலாநிதி, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இழப்பீடு பெற்று தரக்கோரியும் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. கடன் வழங்காமல் அலைக்கழித்த சம்பந்தப்பட்ட வங்கிக்கு ரூ.75 ஆயிரம் அபராதமும், வழக்கு செலவு ரூ.15 ஆயிரம் என ரூ.90 ஆயிரத்தை 2 மாதத்திற்குள் கலாநிதிக்கு வழங்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தர்மர் தீர்ப்பளித்தார்.
மேலும், கடன் வழங்காமல் அலைக்கழித்த வங்கியின் மேலாளர் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X