search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி- வாக்காளர்கள், கூட்டணி கட்சியினருக்கு விஜயகாந்த் நன்றி

    இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு, வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணி கட்சியினருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர்.

    இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களுக்கு, வாக்களித்த வாக்காளர்கள் மற்றும் வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணி கட்சியினருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறந்த முறையில் பிரசாரம் செய்ததற்காக  தமக்கும், பிரேமலதாவிற்கும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சர் நன்றி தெரிவித்ததாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
    Next Story
    ×