என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
Byமாலை மலர்24 Oct 2019 4:20 PM GMT (Updated: 24 Oct 2019 4:20 PM GMT)
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள நாராயண அள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42). விவசாயி. இவர் வீட்டில் மாடு வளர்த்து வருகிறார்.
இந்தநிலையில் முருகேசன் நேற்று மாட்டை வீட்டின் வெளியே உள்ள கொய்யா மரத்தில் கட்டுவதற்காக சென்றார். அப்போது கொய்யா மரத்தின் மீது மின்வயர் அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை அறியாத முருகேசன் மாட்டை கொய்யா மரத்தில் கட்ட முயற்சிக்கும்போது முருகேசன் உடலில் மின்சாரம் பாய்ந்தது.
இதில் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் முருகேசன் மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு முருகேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X