என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயியை தாக்கிய 2 பேருக்கு ஜெயில் தண்டனை- தென்காசி கோர்ட்டு தீர்ப்பு
Byமாலை மலர்24 Oct 2019 3:22 PM GMT (Updated: 24 Oct 2019 3:22 PM GMT)
தென்காசி அருகே விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயியை தாக்கிய 2 பேருக்கு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளைவலசையை சேர்ந்த மூக்கன் மகன் சண்முகம் (எ) ராஜன்(வயது 61). சிவஞானம் மகன் சற்குணம் (60). இவர்கள் 2 பேரும் சேர்ந்து வாங்க விரும்பிய இடத்தை அதே ஊரை சேர்ந்த சற்குணம் மைத்துனர் இருளாண்டி மகன் ராக்கன் (74) என்பவர் கிரையம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு ராக்கன் நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த போது, சண்முகம் அரிவாளுடனும், சற்குணம் தென்னை மட்டையை எடுத்து சென்று ராக்கனை அவதூறாக பேசி அரிவாளால் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக சண்முகம் மற்றும் சற்குணம் மீது தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து தென்காசி கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் இவர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத்தவறினால் 1 மாதம் மெய்காவல் தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி ரஸ்கின்ராஜ் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆஜரானார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X