என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கரிக்கலாம்பாக்கத்தில் நிலத்தகராறில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் - 4 பேருக்கு வலைவீச்சு
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களது குடும்பத்துக்கும், ஆண்டியார் பாளையத்தை சேர்ந்த சாந்தியின் அண்ணன் சுப்புராயன் குடும்பத்துக்கும் நிலத்தகராறு இருந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சுப்புராயனை ஏழுமலை கத்தியால் குத்தி விட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தற்போது ஏழுமலை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரு குடும்பத்தினருக்கும் மீண்டும் நிலத்தகராறு ஏற்பட்டது. அப்போது சுப்புராயன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த ரமேஷ், பிரசாந்த், குமரேசன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சாந்தியை தடியாலும், கையாலும் சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சாந்தி மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்புராயன் உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்