என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் திருடிய 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்24 Oct 2019 10:44 AM GMT (Updated: 24 Oct 2019 10:44 AM GMT)
திருப்பூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் திருடிய வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 18 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் ஊத்துக்குளி அருகே உள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் (வயது29). தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (24), என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் 2 பேரும் திருப்பூர் பாலாஜி நகர் பகுதியில் தங்கி இருந்து ஊத்துக்குளி மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள் திருடியது உள்பட பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 18 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் ஊத்துக்குளி அருகே உள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் (வயது29). தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (24), என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் 2 பேரும் திருப்பூர் பாலாஜி நகர் பகுதியில் தங்கி இருந்து ஊத்துக்குளி மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் உள்ள வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள் திருடியது உள்பட பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 18 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X