என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செங்குன்றம் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி பணம்-செல்போன் பறிப்பு
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அன்னை இந்திரா நினைவு நகரைச் சேர்ந்தவர் இடி மன்னன் ( வயது 42).
இவர் இவரது நண்பர்கள் இரண்டு பேருடன் சோழவரம் பழைய விமான தளம் எதிரே உள்ள ஒரு மைதானத்தில் இரவு மது அருந்தினார்.
அப்போது நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட நாகாத்தம்மன் நகரைச் சேர்ந்த மணி என்கின்ற மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் இடி மன்னனிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டுள்ளனர்.
எனவே, இடிமன்னனை கத்தியால் தலையில் வெட்டி அவரிடமிருந்த ரொக்கப் பணம் ரூ. 14 ஆயிரம் மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்றனர் இடி மன்னன் செங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணிகண்டன் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்