search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சுவாமிமலை அருகே ஓட்டலை சூறையாடிய 3 வாலிபர்கள் கைது

    சுவாமிமலை அருகே முன்விரோத தகராறில் ஓட்டலை சூறையாடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ள கடிச்சம் பாடி மெயின் ரோட்டில் வசிப்பவர் சரவணன் (வயது 30). இவர் கடிச்சம்பாடி மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். 

    இவருக்கும் வாலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (28), கார்த்திக் (26), கதிரவன் (20) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று 3 பேரும் கடிச்சம்பாடிக்கு சென்று சரவணனிடம் தகராறு செய்து அவரது ஓட்டலை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து சரவணன் சுவாமிமலை போலீசில்  புகார் செய்தார். புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் குமார், கதிரவன், கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×