என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோசடி புகாரில் சிக்கிய மருமகன் செயல்களுக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை: கருணாநிதி மகள் செல்வி
Byமாலை மலர்23 Oct 2019 2:14 AM GMT (Updated: 23 Oct 2019 2:14 AM GMT)
மோசடி புகாரில் சிக்கிய மருமகன் செயல்களுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கருணாநிதியின் மகள் செல்வி, பத்திரிகைகளில் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை :
மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகள் செல்வி, அவரது கணவர் செல்வம் ஆகியோரின் மருமகன் டாக்டர் ஜோதிமணி, அவரது நண்பர் ஜாகீர் அகமத்தமான் ஆகிய இருவரும் 20 சதவீத கமிஷனுக்கு பணத்தை மாற்றித்தருவதாக கூறி அழகுசாதன வியாபாரி தினேஷ் என்பவரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதற்கிடையே, ‘மருமகன் செயல்களுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று கருணாநிதியின் மகள் செல்வி, பத்திரிகைகளில் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘எங்கள் மருமகன் டாக்டர் வி.எம்.ஜோதிமணியின் எந்த செயல்களுக்கும், நடவடிக்கைகளுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவற்றிற்கு நாங்கள் பொறுப்புமல்ல’’ என்று கூறப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகள் செல்வி, அவரது கணவர் செல்வம் ஆகியோரின் மருமகன் டாக்டர் ஜோதிமணி, அவரது நண்பர் ஜாகீர் அகமத்தமான் ஆகிய இருவரும் 20 சதவீத கமிஷனுக்கு பணத்தை மாற்றித்தருவதாக கூறி அழகுசாதன வியாபாரி தினேஷ் என்பவரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்த நிலையில், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதற்கிடையே, ‘மருமகன் செயல்களுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று கருணாநிதியின் மகள் செல்வி, பத்திரிகைகளில் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘எங்கள் மருமகன் டாக்டர் வி.எம்.ஜோதிமணியின் எந்த செயல்களுக்கும், நடவடிக்கைகளுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவற்றிற்கு நாங்கள் பொறுப்புமல்ல’’ என்று கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X