search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    தர்மபுரியில் மூதாட்டி மாயம்- பேரன் புகார்

    தர்மபுரியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மாயமானார். இது குறித்து அவரது பேரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் செட்டிகரை கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது பாட்டி அங்கம்மாள் (வயது 85) பென்னாகரம் அடுத்துள்ள பெத்தம்பட்டி பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி அங்கம்மாள் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் இரண்டு நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த சீனிவாசன் பல இடங்களில் தேடி பார்த்தும் அங்கம்மாள் கிடைக்கவில்லை. எனவே சீனிவாசன் பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் எனது பாட்டியை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் புகார் செய்தார்.

    இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன மூதாட்டியை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×