என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடத்தூரில் 5 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை- மூதாட்டியிடம் செயின் பறிப்பு
Byமாலை மலர்22 Oct 2019 4:07 PM GMT (Updated: 22 Oct 2019 4:07 PM GMT)
கடத்தூரில் அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி:
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட வன்னியர் தெரு பகுதியில் நள்ளிரவு 5 வீடுகளில் பூட்டுகளை உடைத்தனர். பின்னர் அவர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடியுள்ளனர்.
அப்போது ஒரு வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியின் வாயில் துணியை திணித்து அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து தொடர்ந்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X