search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கோவை அருகே விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி

    கோவை அருகே விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ஆண்டனி ஸ்டான்லி (வயது 51). இவரது மனைவி இசபெல்லா ஜெனி (வயது 50). சம்பவத்தன்று தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் மதுக்கரை மரப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் இசபெல்லா ஜெனி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த ஆண்டனி ஸ்டான்லியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்....

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (52). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சேத்துமடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முருகேசன் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் .அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×