என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பண்டசோழ நல்லூரில் தனியார் தொழிற்சாலையை மூட கோரி கிராம மக்கள் போராட்டம்
Byமாலை மலர்21 Oct 2019 5:26 PM GMT (Updated: 21 Oct 2019 5:26 PM GMT)
பண்டசோழ நல்லூரில் தனியார் தொழிற்சாலையை மூடக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
சேதாரப்பட்டு:
நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழநல்லூரில் பிரபல தனியார் பெயிண்ட் தொழிற்சாலை உள்ளது. கடந்த 18-ந் தேதி இரவு இந்த தொழிற்சாலையில் பாய்லர் ஒன்று திடீரென வெடித்து தீ பிடித்தது. இதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் பண்டசோழநல்லூர் கிராமமே சுற்றுசூழல் மாசு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.
இந்த விபத்தில் உயிர் இழப்பு ஏற்படாவிட்டாலும் தொடர்ந்து இந்த தொழிற்சாலை இயங்கினால் அப்பகுதியில் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதோடு நிலத்தடி நீரும் பாதிப்பு ஏற்படும் என கருதினர். இதையடுத்து அப்பகுதி மக்கள் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரியும், தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் இன்று காலை ஊர் பிரமுகர் பிரபாகரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X