search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரதட்சணை கொடுமை
    X
    வரதட்சணை கொடுமை

    பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை- கணவர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

    கழுகுமலையில் வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமை செய்த கணவர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ஆலங்குளம்:

    கழுகுமலை நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு பூங்கோதை என்ற மனைவியும், பீட்டர் ராஜேந்திர பிரபு என்ற மகனும், கிறிஸ்டினா மேரி என்ற மகளும் உள்ளனர். இதில் கிறிஸ்டினா மேரிக்கு திருமணமாகி விட்டது. அவர் சுரண்டையில் வசித்து வருகிறார். பீட்டர் ராஜேந்திர பிரபு பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு பிரபுவுக்கு சுரண்டை காமராஜ் நகரை சேர்ந்த ஐஸ்வர்யா(22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த மறுநாளில் இருந்தே ஐஸ்வர்யாவை பிரபுவும் அவரது அம்மா மற்றும் அக்கா ஆகிய 3 பேரும் சேர்ந்து கொடுமைபடுத்தியுள்ளனர்.

    மேலும் நீ உன் பெற்றோரிடம் ரூ. 50 ஆயிரம் வாங்கி வரவேண்டும் என கூறி கொடுமைபடுத்தியுள்ளனர். பின்னர் ஐஸ்வர்யாவை பெங்களூருக்கு அழைத்து சென்று அங்குள்ள தனியார் விடுதியில் சேர்த்துள்ளனர். அவரை வேலைக்கு போக சொல்லி பிரபு பிடிவாதம் செய்துள்ளார். மேலும் ஐஸ்வர்யாவின் தலையில் மண்எண்ணையை ஊற்றி கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.  

    இதையடுத்து மனமுடைந்த ஐஸ்வர்யாவும், அவரது பெற்றோரும் ஆலங்குளம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் பிரபு, கிறிஸ்டினா மேரி, பூங்கோதை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×