search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    போச்சம்பள்ளி அருகே கல்லூரி மாணவி மாயம்

    போச்சம்பள்ளி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாதது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சின்னபுளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 50). இவர் தனியார் பள்ளியில் டிரைவராக உள்ளார். இவரது மகள் சிவசக்தி (19). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த மாதம் 23-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து பாரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குபதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.
    Next Story
    ×