search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சாத்தான்குளம் அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

    சாத்தான்குளம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தவிளையை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகன் ஜெயக்குமார் (வயது 37). இவரது மனைவி முத்துலெட்சுமி. இவர் திசையன்விளையில் செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ஜெயக்குமார் மனக்கவலையில் இருந்து வந்துள்ளார்.  பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தட்டார்மடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெயக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×