என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்
Byமாலை மலர்21 Oct 2019 10:27 AM GMT (Updated: 21 Oct 2019 10:27 AM GMT)
குமரி மாவட்டம் முழுவதும் விடிய, விடிய கனமழை பெய்ததால் 100 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் விடிய, விடிய பெய்த கனமழையால் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. புத்தேரி, புளியடி, சுசீந்திரம், தக்கலை, திருவட்டார், விளவங்கோடு, கல்குளம் உள்பட பல பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ராஜாக்கமங்கலம் அண்ணா காலனி, மேல சங்கரன்குழி பகுதிகளில் பல வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துவிட்டது. நாகர்கோவில் பறக்கின்கால் மடத்தெருவில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. அதே போல தோவாளை, திருவட்டார் உள்பட பல இடங்களில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. மழை வெள்ளம் சாலைகளில் ஓடுவதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X