search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கணவர் பிரிந்து சென்றதால் ஆசிட் குடித்து இளம்பெண் தற்கொலை

    சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கணவர் பிரிந்து சென்றதால் மனவேதனையில் இளம்பெண் ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    போரூர்:

    எம்.ஜி.ஆர். நகர், சூளைப்பள்ளம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி அகிலா (வயது30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்து சிவக்குமார் விழுப்புரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    தனியாக வசித்து வந்த அகிலா கடந்த வாரம் சிவகுமாரை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் சிவகுமார் வர மறுத்து விட்டார். இதில் மனவேதனை அடைந்த அகிலா வீட்டில் இருந்த ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×